திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல் மூலம் கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடரபாக அமீரக தூதரக துணை செயலாளராக பணி புரிந்த சொப்னா, மக்கள் தொடர்பு அதிகரியாக பணியாற்றிய சரித் உட்பட 25க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் கடத்தலில் முதல்வர் பினராய் விஜயனின் முதன்மை செயலாளராக பணயாற்றிய ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.