சென்னை: தமிழகத்தில், நேற்று புதிதாக 1,152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 19 பேர் உயிரிழந்துள்ளனர்.இது குறித்து சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,152 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், மொத்த எண்ணிக்கை 26,92,949 ஆக உள்ளது. இதேபோல், த 1,392 பேர் குணமடைந்தனர். அதன்படி குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26,43,431 ஆக உள்ளது.