தமிழகத்தில் இன்று 6வது கட்டமாக 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்: 2.50 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு

சென்னை: தமிழகத்தில் 6வது கட்டமாக இன்று 50 ஆயிரம் இடங்களில் மெகா  தடுப்பூசி  முகாம் நடக்கிறது. இதில் 2.50 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த  பல்வேறு  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, மெகா கொரோனா  தடுப்பூசி  முகாமை வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தி வருகிறது.  அதன்படி,  தமிழகம் முழுவதும் இதுவரை 5 மெகா தடுப்பூசி முகாம்கள்  நடத்தப்பட்டுள்ளன.  இதன்மூலம் லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசிகள்  போடப்பட்டுள்ளது. இதற்கிடையே  கடந்த 17ம் தேதி நடைபெற இருந்த 6வது கட்ட  மெகா கொரோனா தடுப்பூசி முகாம்  திடீரென்று ரத்து செய்யப்பட்டது. பிறகு இந்த  முகாம் வரும் 23ம் தேதி  நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று முகாம் நடக்கிறது.

தமிழகத்தில்  இதுவரை நடந்த மருத்துவ  முகாம்களை விட அதிகமாக 50 ஆயிரம் இடங்களில் 6வது  கட்ட மெகா கொரோனா  தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதேபோல், சென்னையிலும்  தீவிரமாக கொரோனா  தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் 26ம்  தேதி சென்னை  மாநகராட்சியின் சார்பில் 200 வார்டுகளில் நடத்தப்பட்ட 400  தடுப்பூசி  சிறப்பு முகாம்கள் மூலம் 1,35,865 பேர் தடுப்பூசி செலுத்தி   கொண்டுள்ளனர். சென்னையில் 20ம் தேதி வரை அரசு, மாநகராட்சி மற்றும்   தனியார் மருத்துவமனைகளின் சார்பில் மொத்தம் 71,19,870 தடுப்பூசிகள்   செலுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சென்னை மாநகராட்சியின் சார்பில்   மீண்டும் இன்று 1600 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு 6வது   தீவிர தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களின் மூலம் சுமார் 2.50   லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இதற்காக  600  மருத்துவர்கள், 600 செவிலியர்கள் உட்பட மொத்தம் 16,000 பேர்  பணியில்  ஈடுபட உள்ளனர்.

Related Stories: