அம்பத்தூர், சோழிங்கநல்லூர் பகுதிகளில் குளத்தின் பெயர் மாற்றம்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: அம்பத்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலத்தில் அமைந்துள்ள வண்ணான் குளம் என்ற பெயரினை திருத்தம் செய்து வண்ண குளம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: முதல்வர் தலைமையில் நடைபெற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மீளாய்வு கூட்டத்தில், சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலம், வார்டு-82 மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-192ல் அமைந்துள்ள வண்ணான் குளத்தின் பெயரை திருத்தம் செய்து வண்ண குளம் என பெயர் மாற்றம் செய்யுமாறு அறிவுறுத்தினார்.

அதனடிப்படையில் மேற்கண்ட பகுதிகளில் உள்ள வண்ணான் குளம் என்ற பெயர் திருத்தம் செய்து வண்ண குளம் என்ற  புதிய பெயர் வைக்க சிறப்பு அதிகாரி மூலமாக மன்றத்தின் அனுமதி பெறப்பட்டது. தொடர்ந்து, பெயர் மாற்றி புதிய பெயர் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: