மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து; மாடியிலிருந்து குதித்த ஒருவர் பலி

மும்பை: மும்பையில் அவிக்னா அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 60 மாடி கட்டிடத்தில் 19வது தளத்தில் தீப்பிடித்துள்ளது தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

19வது மாடியில் இருந்து இளைஞர் ஒருவர் உயிர் பிழைப்பதற்காக கீழே குதித்துள்ளார். 19வது மாடியில் மேலும் பலர் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தீயில் இருந்து தப்பிக்க முயன்ற இளைஞர் 19வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த மும்பை மேயர் தற்பொழுது அந்த குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டு தீயணைக்கும் பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டுமெனவும் அதேபோன்று தீக்காயம் ஏற்பட்டோர்களுக்கு தேவையான நிவாரணம் உடனடியாக மேற்கொள்ள காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினரை கேட்டுக்கொண்டுள்ளார். 

Related Stories: