புதுச்சேரி: புதுச்சேரி சேதராப்பட்டு பகுதியில் உள்ள தனியார் ஆலையில் கிரேன் அறுந்து விழுந்து வடமாநில தொழிலாளி உயிரிழந்தார். உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் - வடமாநில தொழிலாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. வடமாநில தொழிலாளர்கள் போலீஸ் வாகனத்தை அடித்து நொறுக்கியதால் 3 போலீசார் காயம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.