சென்னை: அரியர் தேர்வு எழுதாமல் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை அடுத்து, தமிழ்நாட்டில் அரியர் தேர்வுகள் ரத்து செய்து மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து, அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.