துபாய்: உலக கோப்பை டி.20 கிரிக்கெட் தொடரில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு துபாயில் நடக்கிறது. இந்த போட்டி குறித்து இப்போதே ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. உலக கோப்பை தொடர்களில் இந்தியாவை பாகிஸ்தான் இதுவரை வென்ற வரலாறு கிடையாது. ஆனால் இந்த முறை அதனை மாற்ற பாகிஸ்தான் அணி தீவிரமாக உள்ளது. இந்நிலையில் அந்த அணியின் பேட்டிங் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹெய்டன் அளித்த பேட்டி: இந்திய அணியின் ஓப்பனிங் வீரர் கே.எல்.ராகுல் தான் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பார்.