கரூர் : கரூரில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை பலத்த மழை பெய்து கரூரை குளிர்வித்தது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான அளவில் சாரல் மழை பெய்தது.