பரமக்குடி : உயிருக்கு போராடும் ஆசிரியர் விரைவில் குணமடைய வேண்டி பள்ளி மாணவர்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்த சம்பவம், பரமக்குடி பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே தோளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் (32). திருமணமாகி 4 வயது ஆண் குழந்தை உள்ளது. பரமக்குடி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில், ஒரு மாதமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதில் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு தினமும் டயாலிசிஸ் செய்யப்படுகிறது. விவசாய குடும்பத்தைச் சேர்ந்த ராஜசேகரின் பெற்றோர் கூலி வேலை செய்து வாழ்ந்து வருகின்றனர்.