அணைக்கட்டு : அணைக்கட்டு ஒன்றியம், கெங்கநல்லூர் அருகே சின்ன அணைக்கட்டு, இருளர்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்வதற்காக ஏரி நீர் செல்லும் கால்வாயின் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இணைப்பு சாலை அமைக்கப்பட்டது. இதனை அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். அவ்வாறு அமைக்கப்பட்ட இணைப்பு சாலை, சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும், தற்போது பெய்து வரும் கனமழையால், கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதால், மண் அரிப்பு ஏற்பட்டு சாலையின் நடுவே உடைந்து பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த இணைப்பு சாலையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.