சென்னை: அக்டோபர் 26ல் தென்மேற்கு பருவமழை முடிந்து அன்றைய தினமே வடகிழக்கு பருவமழை தொடங்குவதாக சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை பெரும்பாலான மாவட்டங்களில் நாளை முடிய தொடங்கும் என்று வானிலை மைய இயக்குனர் கூறியுள்ளார். வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. மதுரை, விருதுநகர், சிவகங்கை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சியில் கனமழை பெய்யக்கூடும். திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.