அரியலூர்: தடுப்பூசி போட்டால் தான் கொரோனாவை ஒழிக்க முடியும் என்பது இப்போதாவது பிரதமருக்கு தெரிந்ததில் மகிழ்ச்சி என திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் செந்துறையில், நீட் தேர்வுக்கு எதிரான புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, இந்தியாவில் 100 கோடி பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை புரிந்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், விளக்கேற்றுவது, கைதட்டுவது போன்றவற்றால் கொரோனாவை ஒழிக்க முடியாது என்பதை பிரதமர் நரேந்திர மோடி தெரிந்துக்கொண்டதாக கூறினார். செய்தியாளர்களிடம் கி.வீரமணி பேசியதாவது; கைதட்டல் மூலமாகவோ, விளக்கேற்றுவதன் மூலமாகவோ இனிமேல் கொரோனாவை ஒழிக்க முடியாது என்பதை பிரதமர் ஒப்புக்கொண்டுள்ளார்.