புனே: மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே மாவட்டம் பிம்ப்ரிகேட் கிராமத்தில் உள்ள பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் நேற்று மதியம் கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தன. அதில், நேற்று மதியம், வங்கியின் முன்பு வந்து நின்ற காரில் இருந்து முகமூடி அணிந்த 5 பேர் இறங்குகின்றனர். அவர்களில் ஒருவர் வங்கிக்கு வெளியே நிற்கிறார். மற்ற 4 பேரும் வங்கிக்கு உள்ளே சென்றதும் துப்பாக்கி முனையில் ஊழியர்களை மிரட்டுகின்றனர். ஊழியர்கள் கையை உயர்த்தியதும், வங்கி மேலாளர், கேஷியரை மிரட்டி பணம், நகைகளை கொள்ளையடித்து விட்டு காரில் தப்பிச் செல்கின்றனர். கார் அகமத்நகர் நோக்கி சென்றதாக கூறப்படுகிறது.