சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்காக நடத்தப்பட்ட துணைத் தேர்வுக்கு பிறகு மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்ய விண்ணப்பித்தவர்களுக்கான முடிவுகளை தேர்வுத்துறை இன்று வெளியிடுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகளில் படித்த பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டது. அவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. பள்ளிகளில் படிக்காமலும், ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத தனித் தேர்வர்களும் தேர்வு எழுத வசதியாக, துணைத் தேர்வு கடந்த மாதம் நடத்தப்பட்டது. அந்த தேர்வு முடிவுகள் வெளியிட்ட பிறகு, அதில் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்று கேட்டு பல மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் சிலருக்கு மதிப்பெண்களில் மாற்றம் வந்துள்ளது.