சென்னை: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிக்கை: சுதந்திர போராட்ட தலைவர்கள், வீரர்கள், தியாகிகளின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் மட்டுமே அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும் நடைமுறை ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்படுகிறது. தமிழ்நாடு அரசின் சார்பாக நிறுவப்பட்டுள்ள எந்தவொரு தலைவரின் சிலைக்கும் அரசின் சார்பாக தினசரி மாலையிடும் வழக்கம் இல்லை. இனி வருங்காலங்களில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா வளாகத்தில் (தமிழ்நாடு மாநில உயர்கல்வித்துறை மன்ற வளாகம்) நிறுவப்பட்டுள்ள உருவச் சிலைக்கு ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும்.