ஓடும் ரயிலில் பெண்ணிடம் பணம், நகை கொள்ளை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் - துரப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (47). இவர் துரப்பள்ளம் பஜாரில் பேன்சி கடை நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் மகேஷ்வரி கும்மிடிப்பூண்டி இரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார். பிராட்வேயில் உள்ள கடையில்  பேன்சி பொருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் அதேநாள் இரவு சூளூர்பேட்டை செல்லும் மின்சார ரயிலில் ஏறி உள்ளார். அப்போது, கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் ரயில் சென்றுக் கொண்டிருந்தது.  

கும்மிடிப்பூண்டி - எளாவூர் செல்லும் இடைபட்ட பகுதியில் அந்த பெட்டியில் யாருமே இல்லாததை நோட்டமிட்ட அங்கிருந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் மகேஷ்வரி கழுத்தில் கத்தியை வைத்து 5 சவரன் நகை, ரூ.5 ஆயிரம் கொள்ளையடித்து. பின்னர் அவர்கள் ஓடும் ரயிலில் இருந்து ஏரியில் குதித்து தப்பித்து விட்டனர். இது குறித்து, மகேஷ்வரி சென்னை கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசாரிடம் புகார் மனு அளித்தார். இதனை தொடர்ந்து, தனிப்படை போலீசார் இவர்கள் பயணித்த இடம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: