சென்னை: ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் அளிப்பது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். பண்டிகைக் காலம் நெருங்குவதால் கூடுதல் தளர்வு அல்லது கட்டுப்பாடு விதிப்பது பற்றி ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.