பிரதமர் மோடித் தலைமையின் கீழ் இந்தியா படைத்த சாதனை வரலாற்று சிறப்புமிக்க பெருமையான தருணம்: அமித்ஷா புகழாரம்!!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடித் தலைமையின் கீழ், 100 கோடி மக்களுக்குமேல் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தியதற்காக, நாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் பெருமையானத் தருணம் என அவர் விவரித்துள்ளார்.இது குறித்த பதிவில், அமித்ஷா கூறுகையில், ‘‘ வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் பெருமையானத் தருணம்! நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமை மற்றும் நிலையான ஊக்குவிப்பு மூலம் இந்தியா இன்று, 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்குக் கோவிட்-19 தடுப்பூசிச் செலுத்திச் சாதனைப் படைத்துள்ளது. இது புதிய இந்தியாவின் மிகப் பெரிய திறனை, ஒட்டுமொத்த உலகத்துக்கும் மீண்டும் தெரிவித்துள்ளது’’இந்த முக்கியச் சாதனையை அடைந்ததில், அனைத்து விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பங்களிப்புக்காக அவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில், ‘‘ இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கச் சாதனைக்காக நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன் மற்றும் பல சவால்களைச் சமாளித்து இந்த உயர்ந்த பணியில் தங்கள் பங்களிப்பை அளித்த அனைத்து விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் மற்றும் அனைவரின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட பிரதமர் நரேந்திர மோடியை வாழ்த்துகிறேன்.’’ என கூறியுள்ளார்.

Related Stories: