சிவகாசி: தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. சிவகாசியில் பட்டாசுகளை வாங்க சென்னை, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் கேரளா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் மக்கள் நேரடியாக வந்த வண்ணம் உள்ளனர். இந்த ஆண்டு பல புது ரக பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளதுடன் அதிக தள்ளுபடி விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பட்டாசுகள் விலை 5 முதல் 10% வரை அதிகரித்துள்ளதாக பட்டாசு தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.