பந்தலூர் : பந்தலூர் அருகே அரசு தேயிலைத்தோட்டம் டேன்டீ கொளப்பள்ளி, நெல்லியாளம், சேரம்பாடி, சேரங்கோடு பகுதிகளில் டேன்டீ தொழிலாளர்கள் பயன்படுத்துவதற்கு குடியிருப்பு அருகில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த பல வருடங்களுக்கு முன் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகள் தற்போது பழுதடைந்து பயன்படுத்த முடியாமல் உள்ளது. இதனால் டேன்டீ தொழிலாளர்கள் இயற்கை உபாதைகளுக்கு கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.