டெல்லி: உயர்சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் ஒன்றிய அரசின் முடிவு குறித்து உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. எந்த ஆய்வின் அடிப்படையில் உயர்சாதியினருக்கு இடஒதுக்கீடு பற்றி முடிவு செய்யப்பட்டுள்ளது. சொத்துகளை கணக்கில் கொள்ளாமல் வருமானத்தை மட்டும் கணக்கிடுவது எப்படி சரியாகும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.