சீன எல்லையில் படை பலத்தை அதிகரிக்கும் இந்தியா: அதிநவீன எல்70 ரக சிறு ஏவுகணைகள் நிறுத்தி வைப்பு

லடாக்: சீனாவை ஒட்டிய எல்லை பகுதியில் உள்ள மலைகளில் விமானங்களை வீழ்த்தக்கூடிய அதிநவீன எல்70 ரக சிறு ஏவுகணைகளை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. இந்திய சீன படைகளிடையே கடந்த ஆண்டு லடாக் பகுதியில் மோதல் மூண்டத்திலிருந்து எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. சீனாவும் எல்லையில் தனது படைகளின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருவதுடன் இராணுவத்தினரை பயிற்சியிலும் ஈடுபடுத்தி வருகிறது.

 இந்நிலையில் அருணாசலப் பிரதேசத்தில் சீனாவை ஒட்டிய பகுதிகளில் அமைந்துள்ள மலைகளில் எல்70 ரக அதிநவீன விமான எதிர்ப்பு சிறு ஏவுகணைகளை இந்தியா நிறுத்தி வைத்திருக்கிறது. ஏற்கனவே எம்777 ரக சிறு ஏவுகணைகள் போபர்ஸ் பீரங்கிகளை இந்தியா நிறுத்தி இருக்கும் நிலையில் அவற்றுடன் தற்போது எல்70 ஏவுகணைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. எல்லையில் படைகளின் தயார்நிலை குறித்து இராணுவ மற்றும் விமான படை தளபதிகள் அவ்வப்போது நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக எல்லையில் படைபலம் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: