டெல்லி: 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா வரலாறு படைத்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்தியாவின் விஞ்ஞானம், சுறுசுறுப்பு, 130 கோடி மக்களின் உற்சாகமே இந்த சாதனைக்கு காரணம் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இந்த சாதனையை அடைய உழைத்த அனைவருக்கும் நன்றி என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.