ஜெட் வேகத்தில் உயரும் எரிபொருள் விலை : கடந்த 21 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை 18வது முறையாக அதிகரிப்பு!!

சேலம்: பெட்ரோல், டீசல் விலை கடந்த 21 நாட்களில் 18வது முறையாக அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினமும் எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு மாற்றி அமைத்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்து வருகின்றனர். இதனால், நாட்டின் பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல் ரூ106க்கு அதிகமாகவும், டீசல் ரூ100க்கு அதிகமாகவும் விற்பனையாகிறது.

இம்மாதத்தில் 4,18,19 தேதிகளில் தவிர 18வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இன்று பெட்ரோல் லிட்டருக்கு 30 காசும், டீசல் 33 காசும் அதிகரிக்கப்பட்டது. இதனால், சென்னையில் பெட்ரோல் ரூ103.61க்கும், டீசல் ரூ.99.59க்கும் விற்பனையாகிறது. அதேசமயம் சேலம் மாநகரில் டீசல் விலை வரலாற்றில் முதன் முறையாக ரூ100யை தாண்டியது.பெட்ரோல், டீசலின் தொடர் விலையேற்றத்தால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசை பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: