ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை, கடத்தூர், கோபி, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து, செல்போன் சிம் கார்டுகளை பெற்று முறைகேடு செய்ததாக மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ரூபேஷ் பிரவீன் என்பவரை கேரள போலீசார் கைது செய்து திருச்சூர் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை ஈரோடு முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.