×

சிங்கள படையினர் கொன்ற மீனவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி தனது டிவிட்டரில் கூறியிருப்பதாவது: வங்கக்கடலில் புதுக்கோட்டை கோட்டைப்பட்டினம் மீனவர்களின் படகு மீது கப்பலை மோதிக் கவிழ்த்து  ராஜ்கிரண் என்ற மீனவரை கொன்ற சிங்களப் படையினர், அவரது உடலையும் இலங்கைக்கு எடுத்துச் சென்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இது மனிதநேயமற்ற அரக்கத்தனம். சிங்களப்படையால் கொண்டு செல்லப்பட்ட மீனவர் ராஜ்கிரணின் உடலை உடனடியாக அவரது சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு குறைந்தது  ரூ.1 கோடி இழப்பீடாக பெற்றுத் தர வேண்டும். கேரளத்தையொட்டிய அரபிக்கடலில் தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றதற்காக இத்தாலிய கடற்படையினர் மீது எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவோ, அதை விடக் கடுமையான நடவடிக்கைகளை  சிங்களக் கடற்படையினருக்கு எதிராக அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : Anbumani , Action should be taken to bring back the body of the fisherman killed by the Sinhala soldiers: Anbumani insists
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத பாஜவை...