திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த வாரம் பெய்த கன மழையால் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் இறந்தனர். ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு மீண்டும் மழை பெய்யும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கேரள சட்டசபை கூட்ட தொடரில், நேற்று மழையால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கூட்டம் நடத்தப்பட்டது.