திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், வரதமாநதி அணையிலிருந்து நேரடி பாசன நிலங்களுக்கும் மற்றும் மறைமுக பாசனமான 18 குளங்களின் பாசனத்திற்கு நாளை முதல் அடுத்தாண்டு மார்ச் 3ம் தேதி வரை 133 நாட்களுக்கு 687.92 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்திலுள்ள 5523.18 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என்று அரசு கூடுதல் தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.