ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அடுத்த வில்லூண்டி தீர்த்தம் கடல் நீர் பச்சை நிறமாக மாறியதுடன் சிறிய வகை மீன்கள் செத்து மிதப்பதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். வில்லூண்டி தீர்த்தம் கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் நீர் பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பல வகையான சிறிய மீன்கள் செத்து கடற்கரை ஓரத்தில் ஒதுங்கியுள்ளன.