பாலக்காடு : பாலக்காடு பிராயிரி சுங்கத்தைச் சேர்ந்தவர் ஷிராஜ் (30), கிணாச்சேரியைச் சேர்ந்தவர் கலாதரன் (32). இவர்கள் பாட்டில்களில் குடிநீர் சப்ளை செய்து வருகிறார்கள். குடிநீர் பாட்டில்களுக்கு நடுவே மறைத்து குட்கா விற்பனை செய்வதாக புகார்கள் வந்தன.தகவல் அறிந்ததும் கலால்துறை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் கல்மண்டபம் என்ற இடத்தில் தண்ணீர் பாட்டில்களை கொண்டு வந்த ஆட்டோவை மடக்கிப்பிடித்து சோதனை செய்தனர்.