தி.மலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பட்டா மாற்றத்திற்கு லஞ்சம் கேட்டதால் பூ வியாபாரி ஒருவர் பேஸ்புக்கில் நேரலையாக வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டார். நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த பூ வியாபாரியான பிரபு தமது பூர்வீக சொத்தை தனியாக பிரித்து பட்டா மாற்றுவதற்காக கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசனை அணுகியுள்ளார். அப்போது அவர் 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பிரபு அந்த தொகையை கொடுக்க மறுத்ததால் கடந்த ஒருமாத காலமாக அவரை அலைக்கழித்ததாக தெரிகிறது.