டெல்லி: தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவினருக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்தார். பாஜக மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கு நன்றி என பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம் என்றும் கூறியுள்ளார்.