ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆயக்கொளத்தூர், பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (35). நேற்று முன்தினம் தமிழ்ச்செல்வி, தனது மொபட்டில் ஸ்ரீபெரும்புதூருக்கு புறப்பட்டார். ஆயக்கொளத்தூர் அருகே சென்றபோது, பின்னால், பைக்கில் ஹெல்மெட் அணிந்து சென்ற 2 பேர், அவரது முதுகில் தட்டினர். உடனே தமிழ்ச்செல்வி மொபட்டை நிறுத்தினார். அப்போது மர்மநபர்கள், அவரது கழுத்தில் இருந்த 6 சவரன் நகையை அறுத்து கொண்டு தப்பினர்.