செங்கல்பட்டு: அனைத்து விவசாய சாகுபடி பயிர்கள் உற்பத்தி விவசாயிகள் சங்கம் சார்பில், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத்திடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது. செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது சம்பா நெல்சாகுபடி செய்யும் நிலை உள்ளது. இதனால், நெற்பயிருக்கு அடி உரமாக டிஏபி மற்றும் யூரியா பயன்படுத்துவது வழக்கம். இந்த உரங்களை தனியார் உரக்கடையில் வாங்க சென்றால் ₹400 குருனை வாங்கினால் மட்டும் டிஏபி மற்றும் யூரியா வழங்கப்படும் என வலுக்கட்டாயமாக கடை உரிமையாளர்கள் எங்களிடம் திணிக்கிறார்கள்.