மதுரை: மதுரையில் தந்தை இறந்தது கூட தெரியாமல் இரவு முழுவதும் வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை போலீசார் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். மதுரை, ஆனையூர் மந்தையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சீனிச்சாமி. இவரது மனநலம் பாதித்த மகள் கிருஷ்ணவேணி (33). இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் சீனிச்சாமி திடீரென உயிரிழந்தார். இது தெரியாமல் கிருஷ்ணவேணி, ஒரு நாள் இரவு முழுவதும் தந்தையின் உடல் அருகிலேயே இருந்துள்ளார்.