திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியம் வளையாம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட இந்திராநகரை சேர்ந்தவர் கிருஷ்ணன்(37). இவரது தந்தை சிவலிங்கம் பல வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் சாராய வியாபாரம் செய்துள்ளார். அவர் இறந்த பிறகு கிருஷ்ணன் சாராய வியாபாரம் செய்வதாகக் கூறி போலீசார் அடிக்கடி வழக்குப்பதிந்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வளையாம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் 9வது வார்டு உறுப்பினருக்கு கிருஷ்ணன் சீப்பு சின்னத்தில் நின்று வாக்கு சேகரித்து வந்தார். தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு திடீரென கிருஷ்ணனை சாராய வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.