ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே எல்லாபுரம் மத்திய ஒன்றியத்தில் உள்ள வாணியன்சத்திரம் கிராமத்தில் ரூ3.20 செலவில் அமைக்கப்பட்ட 100 கே.வி திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ கலந்துகொண்டு டிரான்ஸ்பார்மரை இயக்கி வைத்தார். அப்போது, `இனிமேல் இந்த பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படாது’ என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், குருவாயல் கிராமத்தில் குடிநீர் பிரச்னை இருப்பதால் புதிதாக குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர்.