ஊத்துக்கோட்டை: பிச்சாட்டூர் ஏரியில் இருந்து சோதனை ஓட்டத்துக்காக 10 நிமிடம் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆந்திராவில் தொடர்ந்து மழை பெய்ததால் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள ஆந்திர மாநிலமான நாகலாபுரம், நந்தனம், பிச்சாட்டூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பிச்சாட்டூர் ஏரி நிரம்பியது. இதன் முழு கொள்ளளவு 281 மில்லியன் கன அடியில் தற்போது 278 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.