லக்னோ: ‘உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட, காங்கிரசில் பெண்களுக்கு 40 சதவீதம் வாய்ப்பு அளிக்கப்படும்,’ என்று பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. காங்கிரசும் இம்மாநிலத்தில் இழந்த தனது செல்வாக்கை மீட்டு, ஆட்சியை பிடிப்பதற்காக பிரியங்கா காந்தியை களமிறக்கி இருக்கிறது. இந்நிலையில், நேற்று அவர் உத்தர பிரதேசத்தில் பயணம் மேற்கொண்டார். அப்போது, லக்னோவில் அவர் அளித்த பேட்டி வருமாறு: அரசியலில் பெண்கள் முழு அதிகாரம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது.