கார் மோதி உயிரிழந்த உதவி ஆய்வாளர் பிரசன்னா குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு.! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கார் மோதி உயிரிழந்த உதவி ஆய்வாளர் பிரசன்னா குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சாலையை கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த கார் மோதி பிரசன்னா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வண்டலூர் வயர்லஸ் காவல் நிலையத்தில் தொழில்நுட்ப உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. ஜி. பிரசன்னா அவர்கள் 18.10.2021 அன்று இரவு 8.00 மணியளவில் தமிழ்நாடு காவல்துறை தலைமையிடத்தில் இருந்து காமராஜர் சாலையை கடக்கும்போது அதிவேகமாக வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்ற செய்தியை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

இந்த விபத்தில் உயிரிழந்த தொழில்நுட்ப உதவி ஆய்வாளர் திரு.ஜி.பிரசன்னா குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Related Stories: