டெல்லி : ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ரயில் நிலையங்கள் மேம்பாட்டுக் கழகத்தை (ஐஆர்எஸ்டிசி) நிரந்தரமாக மூடுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இதற்கு முன் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி ரயில்வே துறையில் ரயில்களை மாற்று எரிபொருளில் இயக்குவதற்காக உருவாக்கப்பட்ட கழகமான, ஐஆர்ஓஏஎப் கழகத்தை மத்திய அரசு நிரந்தரமாக மூடியது.இந்நிலையில் ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட கழகத்தையும் மத்திய ரயில்வேதுறை மூடியுள்ளது.