வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதம், சொத்துக்களுக்கு நிவாரணம் வழங்க ரூ. 6.42 கோடி அரசு நிதி ஒதுக்கீடு : அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்!!

சென்னை : சென்னை,  பொதிகை வளாகத்தில்  உள்ள வனத்துறை அமைச்சர் முகாம் அலுவலகத்தில் மாண்புமிகு  வனத்துறை  அமைச்சர்  கா.ராமச்சந்திரன் அவர்கள்     இன்று (19.10.2021)  வன விலங்குகள் பாதுகாப்பு மற்றும் வன விலங்கு மனித மோதல்கள் தடுப்பு மேம்பாட்டுப் பணிகள் குறித்து வனத்துறை உயர்  அலுவலர்களுடன்  ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின்  அவர்களின் அறிவுறுத்தலின்படி, பசுமைத் தமிழகத் திட்டத்தின்படி தமிழ்நாட்டில்  வனப்பரப்பை அதிகரித்து, வன விலங்குகள் பாதுகாப்பு மற்றும் வன  விலங்குகளால் விவசாயிகள் இழப்பு தடுத்தல், உடனடியாக நிவாரணம் வழங்குவது குறித்தும் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன்  உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களுக்கு தக்க அறிவுரை வழங்கினார்கள்.

கூட்ட முடிவில் வனத்துறை அமைச்சர்  பேசும்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு..மு.க.ஸ்டாலின்  அவர்களின் ஆணைக்கிணங்க, வனத்துறை மூலம் பொதுமக்களுக்கும், வன மேம்பாட்டுப் பணிகளுக்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவது குறித்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டில் வனப்பரப்பை அதிகரித்து வன விலங்குகள் பாதுகாப்பு உறுதி செய்வதுடன், வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதம் மற்றும் சொத்துக்கள் பாதிப்பிற்கு நடப்பாண்டில் ரூபாய் 6 கோடியே 42 லட்சத்து 50 ஆயிரம் அரசின் நிதி ஒதுக்கீடு பெரப்பட்டுள்ளது .இதன் மூலம் 2901 பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

மேலும், வரும் காலங்களில் உடனுக்குடன் நிவாரணம் வழங்க ரூபாய்.10 கோடி நிதி விரைவில் ஒதுக்கீடு வழங்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள 5 புலிகள் காப்பகம், யானைகள் வழித்தடத்தில் மேம்பாட்டு பணிகளுக்கு மத்திய, மாநில அரசு நிதி கோரப்பட்டுள்ளது. வன விலங்குகள் மனித மோதல் தடுத்திட  யானை புகா அகழிகள் அமைத்தல், சூரிய சக்தி மின் வேலிகள், தொங்கும் வேலிகள், வேட்டை தடுப்பு காவலர்கள் நியமனம், மோப்ப நாய் பயன்பாடு, நவீன தொழில்நுட்ப கண்காணிப்பு கேமரா நிறுவுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. வனப்பகுதியில் உள்ள விவசாய பயிர்கள் காப்பீடு செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சாத்திய கூறுகள் உள்ள சரணாலயங்களில் வனத்துறை மூலம் சுற்றுச்சூழல் சுற்றுலா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் வனத்துறை அமைச்சர், அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் வனக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கும் கோரிக்கைகளை களைவதற்கான கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன  என்று   வனத்துறை அமைச்சர் திரு .கா.ராமச்சந்திரன் அவர்கள்    தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் வனத்துறை  முதன்மை தலைமை வன விலங்குகள் காப்பாளர் திரு. சேகர் குமார் நீரஜ் இ.வ.ப.,  சென்னை வன உயிரின காப்பாளர் திரு,ஈ.பிரசாந்த்,  மற்றும் வனத்துறை   அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: