டெல்லி :இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்றும் அதனை அனைவரும் தெரிந்து வைத்து இருப்பது அவசியம் என்றும் உணவு விநியோக நிறுவனமான சோமாட்டோவின் வாடிக்கையாளர் சேவை மையம் கூறியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. சோமாட்டோவில் ஆர்டர் செய்த உணவு வராததால் விகாஷ் என்ற இளைஞர் அதன் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி உள்ளார். அப்போது மொழி பிரச்சனையால் சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகத்திடம் இது குறித்து கேட்க முடியவில்லை என்று சோமாட்டோ தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு தமிழ்நாட்டில் சோமாட்டோ செயல்படும் பட்சத்தில் தமிழ் மொழி அறிந்தவர்களை வேலைக்கு அமர்த்தி இருக்க வேண்டும் என்று விகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.