எட்டா உயரத்துக்கு செல்லும் தங்கம் விலை!: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.35,720க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு 72 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. தங்கம் விலை ஒரு நிலையான நிலையில் இல்லாமல் ஏற்றம், இறக்கத்துடன் கண்ணாமூச்சி ஆடி வருகிறது. ரூ.35 ஆயிரத்துக்கு மேல் விற்பனையான தங்கம் விலை திடீரென 35 ஆயிரத்திற்கும் கீழ் சென்றது. பின்னர் படிப்படியாக உயர்வை கண்டு 35 ஆயிரத்திற்கு மேல் அதிகரிக்க தொடங்கியது. இந்த அக்டோபர் மாதத் தொடக்கத்தில் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்தும் வந்தது.

இடைப்பட்ட காலத்தில் குறைய தொடங்கியிருந்தாலும் அடுத்து வந்த நாட்களில் ஓரளவுக்கு உயர்வை கண்டது. இதனால் வாடிக்கையாளர்கள் துயரத்துக்கு ஆளாகினர். தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலம் என்பதால் தங்கம் வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 72 ரூபாய் அதிகரித்திருப்பது நகை பிரியர்களை சற்று கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று சென்னையில், ஒரு சவரன் 35 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 9 ரூபாய் விலை அதிகரித்து, சவரனுக்கு 72 ரூபாய் உயர்ந்திருக்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒருகிராம் 4,465 ரூபாய்க்கும், ஒரு சவரன் 35,720 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் 8 கிராம் 38,632 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதேபோல் வெள்ளி ஒரு கிராம் 67 ரூபாய் 80 காசுகளுக்கும், ஒரு கிலோ 67,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: