திண்டுக்கல்: விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் திண்டுக்கல்லில் தமிழர் எழுச்சி நாள் கருத்தரங்கம் நேற்று நடந்தது. கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு- உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, வேலுச்சாமி எம்பி ஆகியோர் கலந்து கொண்டு சமூகநீதி - சமூகங்களின் ஒற்றுமை குறித்து பேசினர். விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி தலைமை வகித்து பேசுகையில், ‘‘சிறுபான்மையினர் மற்றும் பிற பிரிவினர் இடையே பிளவை ஏற்படுத்தி தமிழகத்தை கூறுபோட பாஜ அரசு முயல்கிறது.