பரமக்குடி: பரமக்குடி அருகே மகளை ஆணவக்கொலை செய்த பெற்றோர் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நண்டுப்பட்டியை சேர்ந்தவர் தென்னரசு. இவரது மகள் கவுசல்யாவுக்கும் (23) பரமக்குடி அருகே செவ்வூரை சேர்ந்த கனகராஜ் என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. 4 மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவி இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டனர். கவுசல்யா நண்டுபட்டியில் உள்ள தந்தை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி கவுசல்யா எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறி, அவரது பெற்றோர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இரண்டு நாள் சிகிச்சை பெற்ற நிலையில், மருத்துவர்களுக்கு தெரியாமல் திடீரென மகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டனர்.