புதுடெல்லி: நீர்மூழ்கி கப்பல்களை தகர்க்கக்கூடிய மேலும் ஒரு பி-8ஐ ரக போர் விமானம் இந்திய கடற்படையிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனம், நீர் மூழ்கி கப்பல்களை தகர்க்கக்கூடிய பி-8ஐ ரக போர் விமானங்களை தயாரித்து வருகிறது. அந்த நிறுவனத்திடம் இருந்து இத்தகைய 8 விமானங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் கடந்த 2009ம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டது.