ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே முன்விரோத தகராறில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். பெரியபாளையம் அருகே வெங்கல் அடுத்த சிவன்வாயில் பகுதியில் சிவன் கோயில் உள்ளது. கோயிலின் அருகே தலையில் வெட்டு காயங்களுடன் வாலிபர் சடலம் கிடப்பதாக வெங்கல் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார் மற்றும் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி, வெங்கல் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.