பூந்தமல்லி: திருவேற்காடு அடுத்த மாதிராவேடு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் உபேந்திரன்(46). இவரது மனைவி லட்சுமி பிரியா(39), நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகில் உள்ள கைப்பிடி சுவர் இல்லாத 2வது மாடியில் லட்சுமி பிரியா காக்காவிற்கு சோறுவைக்க சென்றார். அப்போது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தார். கீழே விழுந்த சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து லட்சுமி பிரியாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.